Published : 15 Sep 2019 11:37 AM
Last Updated : 15 Sep 2019 11:37 AM
இரா.வினோத்
பெங்களூரு
தற்போதைய பெங்களூருவில் எலஹங்கா பகுதியை ஆண்ட கெம்பே கவுடா குறுநில மன்னர் கி.பி.1537ம் ஆண்டு பெங்களூரு நகரை நிர்மாணித்தார். இவரை கர்நாடக மாநிலத்தில் கணிசமான எண்ணிக்கையில் வாழும் ஒக்கலிக வகுப்பினர் தங்களது தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஒக்கலிக வகுப்பினரின் வாக்கு வங்கியை மனதில் வைத்து, கர்நாட காவில் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கெம்பே கவுடாவுக்கு அதிக முக்கி யத்துவம் அளித்து வருகின்றன. பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம், கெம்பே கவுடா பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றுக்கு கெம்பே கவுடா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனிடையே சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் காங் கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவ குமார் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து ஒக்கலிக வகுப் பினர் கடந்த 11-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது பாஜக ஒக்கலிகர் களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அந்த வகுப்பினர், இனி பாஜகவை ஆதரிக்கமாட் டோம் என அறிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக மேலி டம், ஒக்கலிகர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள் ளது.
இந்நிலையில் திடீரென செய்தி யாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா, “பெங்களூருவை உரு வாக்கியவர் கெம்பே கவுடா. அவரது புகழை பரப்பும் நடவடிக் கையில் பாஜக இறங்கியுள்ளது. முதல்கட்டமாக ரூ. 100 கோடி செல வில் அவருக்கு பிரமாண்டமான சிலை சர்வதேச விமான நிலையத் தில் அமைக்கப்படும். முதல் கட்டப் பணிக்காக ரூ.5 கோடி வழங்கப் பட்டுள்ளது'' என்றார். எடியூரப்பா வின் இந்த அறிவிப்பை அரசியல் விமர்சகர்கள் விமர்சித்துள்ள நிலையில், ஒக்கலிக வகுப்பினர் வரவேற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT