Published : 23 Aug 2019 03:41 PM
Last Updated : 23 Aug 2019 03:41 PM

பொருளாதார மந்தநிலையை மத்திய அரசு சரிசெய்யும்; நம்பிக்கை இருக்கிறது: அர்விந்த் கேஜ்ரிவால்

பொருளாதார மந்தநிலையை மத்திய அரசு திறம்பட கையாளும் என்ற பூரண நம்பிக்கை இருப்பதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேஜ்ரிவால், "பொருளாதர மந்தநிலையை மத்திய அரசு திறம்பட கையாண்டு சீரமைக்கும் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது.

பொருளாதார சீரமைப்புக்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு டெல்லி அரசு முழு ஒத்துழைப்பு நல்கும். எனது தனிப்பட்ட கவலையெல்லாம் வேலையிழப்புகள் பற்றியதே. அதை மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மற்றும் ஜவுளி, ரியல் எஸ்டேட் துறைகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை கூர்ந்து கவனிக்க வேண்டும்" என்று பேசினார்.

அண்மையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதற்கும் அர்விந்த் கேஜ்ரிவால் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
காஷ்மீருக்கு யூனியர் பிரதேச அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியதற்கு ஆதரவு தெரிவித்த கேஜ்ரிவால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி தொடர்ந்து போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x