Published : 14 Aug 2019 04:10 PM
Last Updated : 14 Aug 2019 04:10 PM
லக்னோ
ரக்ஷா பந்தன் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் பசுக்களுக்கு ராக்கி கயிறு கட்டப்போவதாக பாஜக மூத்த தலைவர் புக்கல் நவாப் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்ட மேலவை உறுப்பினராக இருப்பவர் புக்கல் நவாப். சமாஜ்வாதி கட்சியில் இருந்த அவர், கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். மேலும் தன்னை அனுமார் பக்தர் என்று அறிவித்த அவர் கடந்த ஒராண்டாகவே அனுமன் விழாக்களை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் ரக்ஷா பந்தன் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் பசுவுக்கு ராக்கி கயிறு கட்டப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
சகோதரத்துவத்தை உணர்த்துவதற்காக பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டுவது வழக்கம். ஆனால் பசுவுக்கும், மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பும் புனிதமானது. சகோதரத்துவம் போன்றது.
எனவே அனைவரிடமும் இந்த கருத்தை கொண்டு செல்லும் வகையில் நாளை ரக்ஷா பந்தன் தினத்தில் பசுக்களுக்கு ராக்கி கட்டப்போகிறேன். இதற்காக லக்னோவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பசுக்களை கொல்லக்கூடாது. வழிபட வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்துவேன்’’ எனக் கூறியுள்ளார்.
முஸ்லிம் தலைவரான நவாப் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT