Published : 29 Jul 2019 12:15 PM
Last Updated : 29 Jul 2019 12:15 PM

ஆதாரங்களை அழிக்க பேராயர் முயற்சி: நீதிமன்றத்தில் கன்னியாஸ்திரி குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்

பேராயர் மீதான பாலியல் வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயற்சி நடைபெறுவதாக நீதிமன்றத்தில் கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க பேராயராக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மேலும் சில கன்னியாஸ்திரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு, கேரளாவின் கோட்டயம் மாவட்டம் பாலாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பாலா நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பேராயருக்கு எதிராகப் போராடி வரும் கன்னியாஸ்திரிகளில் ஒருவர் கூறியபோது, "வழக்கின் முக்கிய ஆதாரங்களை அழிக்க முயற்சி நடைபெறுகிறது. வழக்கை இழுத்தடிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்று குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை பேராயர் தரப்பு வழக்கறிஞர் மறுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.பிராங்கோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x