Published : 20 Jul 2019 11:59 AM
Last Updated : 20 Jul 2019 11:59 AM
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்று அதிகாலையும் மிதமான நிலநடுக்கம்ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச மாநிலம் மற்றும் இடாநகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) 5.6, 3.8 மற்றும் 4.9 ரிக்டர் அளவுகளில் மூன்றுமுறை நிலநடுக்க அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4.24 மணியளவில் 4வது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5.ஆக இருந்ததாகவும் அருணாச்சலப் பிரதேசம் மட்டுமின்றி அசாம், நாகாலாந்திலும் இதன் தாக்கம் இருந்ததாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் சில நொடிகள் நீடித்ததாகவும் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களின் மையப்பகுதிகள் கிழக்கு சியாங் மாவட்டத்திலும், மூன்றாவது அருணாச்சல பிரதேசத்தின் குருங் குமே மாவட்டத்திலும் ஏற்பட்டதாகவும் வானிலை ஆய்வு மைய வலைத்தளம் தெரிவிக்கிறது.
நில அதிர்வு ஆய்வாளர்களின் கூற்றுப்படி, வடகிழக்கு பகுதி நில அதிர்வு வரைபடத்தில் மண்டலம் 5 இன் கீழ் வருகிறது, இதனால் வடகிழக்கு மாநிலங்கள் பூகம்பங்களுக்கு ஆளாகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT