Last Updated : 09 Jul, 2015 09:00 AM

 

Published : 09 Jul 2015 09:00 AM
Last Updated : 09 Jul 2015 09:00 AM

ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் திமுக மனுவில் 9 குறைபாடுகள்: மனுவை திருத்தி தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த‌ மேல்முறை யீட்டு மனுவைத் தொடர்ந்து, திமுக தாக்கல் செய்த மனுவிலும் குறை பாடுகள் இருப்பதாக உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்ப‌ழகன் தரப்பில் கடந்த 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பக்கங்களில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக தரப்பு மனுவை ஆராய்ந்த உச்ச நீதிமன்ற பதிவுத்துறை அதி காரிகள், அதில் பல குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற‌ தலைமைப் பதிவாளர், மனுவில் உள்ள 9 முக்கிய குறைபாடுகளை சரி செய்து, திருத்தப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு திமுக தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதில், “திமுக தாக்கல் செய் துள்ள மனுவில் இணைக்கப்பட்டு இருக்கும் பிரமாணப்பத்திரத்தில் கோரப்பட்டுள்ள முக்கிய விவரங் கள் விடுபட்டுள்ளன. பரிந்துரைக்கப் பட்டுள்ள ஆவணங்களை தர வரிசைப்படி குறிப்பிடப்பட‌ வில்லை. வழக்கில் அன்பழகன் தொடர்பாக உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் தீர்ப்பாணைகள் முழுமையாக இணைக்கப்பட வில்லை. வழக்கு தொடர்பான அர சாணைகள், வழிகாட்டுதல்கள், விசாரணை நீதிமன்றத்தில் முக்கிய குறிப்புகள், அரசு சான்று ஆவணங் கள் மனுவுடன் இணைக்கப்பட‌ வில்லை'' என்பன உள்ளிட்ட 9 குறைபாடுகளை சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.

திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற பதிவா ளர் அலுவலகம் மீண்டும் சரிபார்த்த பிறகே குற்றவியல் வழக்கு எண் கள் ஒதுக்கப்பட்டு, வழக்கை விசாரிக்கப் போகும் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்படும். இந்த நடைமுறைகள் முடிய ஒரு மாத காலம் வரை கால அவகாசம் தேவைப்படும். இதனால் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை தாமதமாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x