Published : 18 Jul 2015 01:03 PM
Last Updated : 18 Jul 2015 01:03 PM
பாகிஸ்தான் ராணுவம், எல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவுஷேரா பகுதியில் சர்வதேச எல்லையில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்றிரவு (வெள்ளி இரவு) 9.25 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இரவு 11.45 மணி வரை தாக்குதல் நீடித்திருக்கிறது. இந்திய தரப்பில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ இல்லை" என்றார்.
ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 9-ம் தேதி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT