

சண்டிகர்: பஞ்சாப் காவல் துறை இயக்குநர் கவுரவ் யாதவ் நேற்று சண்டிகரில் கூறியதாவது:
பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 50 கிலோ ஹெராயினை பஞ்சாப் காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக கபூர்தலாவை சேர்ந்த சந்தீப் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் ஒரு வீட்டிலிருந்து ரூ.4.79 கோடி மதிப்பிலான போதைப் பொருளை மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று கைப்பற்றினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.