மேற்கு வங்க தேர்தலின்போது நடுநிலை தவறியதாக 5 போலீஸார் சஸ்பெண்ட்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க தலை​மைச் செய​லா​ள​ருக்கு தேர்​தல் ஆணை​யம் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்கு வங்க தேர்​தலில்​போது கடும் முறை​கேடு​களில் ஈடு​பட்​ட​தாக​வும் நடுநிலை காக்​கத் தவறிய​தாக​வும் எழுந்​துள்ள குற்​றச்​சாட்​டு​களின் அடிப்​படை​யில் டயமண்ட் ஹார்​பர் கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் சந்​தீப் கராய், துணை காவல் கண்​காணிப்​பாளர் சஜல் மோண்​டல், டயமண்ட் ஹார்​பர் காவல் நிலைய ஆய்​வாளர் மவுசம் சக்​ர​வர்த்​தி, ஃபால்டா காவல் நிலைய ஆய்​வாளர் அஜய் பாக், உஸ்தி காவல் நிலைய அதி​காரி சுபேச்சா பாக் ஆகியோரை உடனடி​யாக சஸ்​பெண்ட் செய்​ய​வும் இவர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​க​வும் உத்​தர​விடப்​படு​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
கருத்துக் கணிப்பின்போது அச்சத்தால் மவுனமாகும் மேற்குவங்க மக்கள்: ஆக்சிஸ் நிறுவன தலைவர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in