

கோப்புப் படம்
கொல்கத்தா: மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க தேர்தலில்போது கடும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் நடுநிலை காக்கத் தவறியதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டயமண்ட் ஹார்பர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் கராய், துணை காவல் கண்காணிப்பாளர் சஜல் மோண்டல், டயமண்ட் ஹார்பர் காவல் நிலைய ஆய்வாளர் மவுசம் சக்ரவர்த்தி, ஃபால்டா காவல் நிலைய ஆய்வாளர் அஜய் பாக், உஸ்தி காவல் நிலைய அதிகாரி சுபேச்சா பாக் ஆகியோரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யவும் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.