Published : 22 Jun 2015 08:31 AM
Last Updated : 22 Jun 2015 08:31 AM

யோகா தின நிகழ்ச்சியில் பாராமுகமாக இருந்த முதல்வரும் ஆளுநரும்

யோகா பயிற்சியானது அனைவரையும் ஒருங்கிணைக்கு சக்தி வாய்ந்தது என்று கூறப்பட்டாலும் அது டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் விஷயத்தில் பொய்த்துப்போனது.

டெல்லி அரசின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் விவகாரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் நீயா நானா என்கிற அதிகாரப்போட்டி இருவருக்கும் இடையே நடந்து வருகிறது.

இந்நிலையில், ராஜ பாதையில் நேற்று நடந்த யோகா தின நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர். ஆனால் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் விலகியே இருந்தனர். அதிகாரப்பூர்வ ஏற்பாட்டின்படி முக்கிய பிரமுகர்கள் வரிசையில் ஆளுநருக்கு அடுத்த 2 நாற்காலிகளுக்கு அப்பால் கேஜ்ரிவால் அமர வேண்டும். ஆனால் இருவரும் கூட்டத்தோடு கூட்டமாக யோகாசனம் செய்யச்சென்றனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைக்கு அவர்கள் செல்லவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x