Published : 22 Jun 2015 08:33 AM
Last Updated : 22 Jun 2015 08:33 AM
டெல்லியில் உள்ள திஹார் மத்திய சிறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் நேற்று யோகா தினத்தை கொண்டாடினர். சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்த இந்த விழாவில் சிறை அதிகாரிகளும் கலந்துகொண்டு கைதிகளுடன் யோகாசனங்களை செய்தனர்.
இதுகுறித்து சிறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 2 மணி நேரம் நடந்தது.
இதற்காக கடந்த 1 மாதமாக கைதிகள் யோகா பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டு வந்தனர்.
கைதிகளுக்கு ஒரு வருட கால யோகா பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை முடிக்கும் கைதிகளுக்கு தண்டனை முடித்து வீடு செல்லும்போது சான்றிதழ் வழங்கப்படும்.
அதைக்கொண்டு அவர்கள் யோகா பயிற்றுநராக வேலையில் அமர வாய்ப்புள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT