Last Updated : 29 Jun, 2015 08:30 AM

 

Published : 29 Jun 2015 08:30 AM
Last Updated : 29 Jun 2015 08:30 AM

மேகாலயா மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

மேகாலயா மாநிலத்தில் பாதுகாப் புப் படையினருடன் நேற்று நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து வடக்கு கரோ ஹில்ஸ் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரமேஷ் சிங் கூறியதாவது:

ரரி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைய டுத்து, அப்பகுதியில் அதிரடிப்படை போலீஸார் மற்றும் அசாமின் 19-வது டோக்ரா ரெஜிமென்ட் படை வீரர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது, பாதுகாப் புப் படையினரை நோக்கி தீவிர வாதிகள் சுட்டுள்ளனர். அவர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பு துப்பாக்கிச் சண்டை யில் 2 தீவிரவாதிகள் பலியாயினர். இவர்கள் அசிக் மட்கிரிக் எலைட் படையைச் (ஏஎம்இஎப்) சேர்ந்த வர்களாக இருக்கலாம் என கருது கிறோம்.

இவர்களிடமிருந்து 2 துப்பாக்கி கள், செல்போன், 3 சிம் கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x