Last Updated : 01 Jun, 2015 05:07 PM

 

Published : 01 Jun 2015 05:07 PM
Last Updated : 01 Jun 2015 05:07 PM

வாஜ்பாய்க்கு வங்கதேச விருது

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு வங்கதேச அரசு விருது வழங்கி கவுரவிக்க உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

1971ம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து விடுதலை அடைவதற்கு வங்கதேசம் போராடியபோது, அந்தப் போராட்டத்துக்கு அப்போது மக்களவை உறுப்பினராக இருந்த வாஜ்பாய் ஆதரவு அளித்தார்.

எனவே அவரை கவுரவிக்கும் விதமாக அவருக்கு 'வங்கதேச விடுதலைப் போராட்ட நண்பர்கள்' எனும் விருதை வழங்க உள்ளது. தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், வாஜ்பாய் அந்த விருதை நேரில் சென்று பெற முடியாது.

எனினும், இந்த மாதம் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் செல்லவிருக்கிறார். அப்போது அவரிடம் இந்த விருது வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வங்கதேசம் வழங்கும் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆவார். 2012ம் ஆண்டு இந்த விருது காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்பட்டது.

இதுதவிர, வங்கதேச போராட்டத்தின்போது உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களைக் கவுரவிக்கவும் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஹசீனா கையெழுத்திட்ட நற்சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x