Published : 08 May 2015 07:44 AM
Last Updated : 08 May 2015 07:44 AM
நாட்டில் இன்று பல்வேறு செய்திச் சேனல்கள் இருந்தாலும், தலைநகரைத் தவிர்த்து நாட் டின் மற்ற பகுதிகளிலும் பல நிகழ்வுகள் நடக்கின்றன. அத் தகைய நிகழ்வுகளையும், உண் மைகளையும் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகி யவை பரந்த தளத்தில் வழங்கும் என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று தூர்தர்ஷன் கைப்பேசி செயலி (மொபைல் ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பேசிய ஜேட்லி மேலும் கூறியதாவது: இன்று வரும் செய்திகள் பெரும்பாலும் தலைநகரை மையப்படுத்தியே இருக்கின்றன.
செய்திகளை முந்தித் தருவது என்ற போட்டியில் இன்று செய்திச் சேனல்கள் இயங்குகின்றன. ஆனால் அதேசமயம் உண்மைத் தகவல்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அறிமுகப்படுத் தப்பட்டிருக்கும் செயலி மூலம் ஒருவர் தூர்தர்ஷன் வழங்கும் பல்வேறு செய்திகளை, உண்மைத் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT