Last Updated : 02 May, 2015 10:45 AM

 

Published : 02 May 2015 10:45 AM
Last Updated : 02 May 2015 10:45 AM

கேஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவர்கள் பிரசாந்த் பூஷண், ஷாஜியா இல்மி ஆகியோர் மீது முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபலின் மகனும் மூத்த வழக்கறிஞருமான அமித் சிபல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந் தார். தந்தையின் செல்வாக்கை அமித் சிபல் தவறாக பயன் படுத்துவதாக கூறியதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டது.

இதுபோல் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபரில் டெல்லியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி போராடியபோது, அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித் பற்றி கேஜ்ரிவால் கூறிய கருத்துக்காக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. ஷீலா தீட்சித்தின் முன்னாள் அரசியல் செயலாளர் பவன் கேரா இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

கேஜ்ரிவால் தன் மீதான அவ தூறு வழக்குகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அவதூறு தொடர்பான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 499, 500 ஆகியவை அரசியல் சாசன உரிமைகளை பாதிப்பதாக கேஜ்ரிவால் கூறியிருந்தார்.இதே பிரிவுகளுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சட்டப்பிரிவு களை ஆராய்வது அவசியம் என்று கூறி, கேஜ்ரிவால் மீதான மேற்கண்ட 2 வழக்குகளின் விசா ரணைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. சுவாமி மனுவுடன் கேஜ்ரிவால் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் மத்திய அரசு மற்றும் எதிர் மனுதாரர்கள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

கேஜ்ரிவால் மீது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, வழக்க றிஞர் சர்மா ஆகியோர் தொடர்ந்த அவதூறு வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 17-ம் தேதி தடை விதித்தது.இந்திய குற்றவியல் சட்டத்தின் 199(2) பிரிவை நீக்கவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் முறையிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x