Published : 21 May 2015 08:38 AM
Last Updated : 21 May 2015 08:38 AM

மேகாலயா ஆளுநராக பதவியேற்றார் வி.சண்முகநாதன்

மேகாலயா மாநிலத்தின் புதிய ஆளுநராக, பாஜக மூத்த தலைவரும் தமிழருமான வி.சண்முகநாதன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், சண்முகநாதனுக்கு மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உமா நாத் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் முகுல் சங்மா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதற்கு முன்பு மேகாலயா ஆளுநராக இருந்த கே.கே. பால், கடந்த ஜனவரி மாதம் உத்தராகண்ட் ஆளுநராக நியமிக் கப்பட்டார். இதையடுத்து, மேற்குவங்க மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதியிடம் மேகாலயா ஆளுநர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 12-ம் தேதி சண்முகநாதன் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அரசியல் அறிவியலில் முதுநிலை பட்டமும் எம்.பில். பட்டமும் படித்துள்ள சண்முகநாதன், கடந்த 1962-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தார். பின்னர் பாஜகவில் சேர்ந்த அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பிரபல எழுத்தாளரான இவர், கலாச்சாரம் மற்றும் சமூகம் தொடர்பாக 3 நூல்களை தமிழில் எழுதி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x