Published : 18 Apr 2015 02:32 PM
Last Updated : 18 Apr 2015 02:32 PM
பிரதமர் நரேந்திர மோடியை 'இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்தவாதி' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டி இருந்ததற்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த வாரம டைம் பத்திரிகை கருத்துக்கணிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியல் வெளியானது. டைம் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றவர்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பு எழுதி வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் பிரதமர் மோடியைப்பற்றி ''இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்தவாதி' என்ற தலைப்பில், ஒபாமா பிரதமர் மோடி குறித்து எழுதி பாராட்டுத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை பாராட்டிய ஒபாமாவுக்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் பாராட்டி இருக்கும் போக்கு குறிப்பிட வேண்டியது. அரசியல் ரீதியாக வேறுபாடு இருந்தாலும் இந்த புகழ்ச்சிக்கு உரியவர்தான் மோடி என்பதில் சந்தேகம் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் திருவனந்தபுர எம்.பி.யுமான சசி தரூர் முன்னதாக பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை பாராட்டியதால் அந்தக் கட்சியில் அவரது மேல் அதிருப்தி உருவானது.
இதன் காரணமாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அவரை அதிரடியாக நீக்கி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT