Published : 23 Apr 2015 11:27 AM
Last Updated : 23 Apr 2015 11:27 AM

விவசாயி தற்கொலை விவகாரம்: ஷாருக்கான் கொந்தளிப்பு

டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை வைத்து ஒருவருக்கு ஒருவர் பழி கூறிக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுமாறு நடிகர் ஷாருக்கான் வலியுறுத்தியுள்ளார்.

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பேரணியின்போது, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயி ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் ஒன்றன் மீது ஒன்று பழி கூறி வருகின்றன. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டரில், "தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக யாரும் தற்கொலை செய்வதில்லை, தங்கள் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அவர்கள் அவ்வாறு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு நொடி சிந்தியுங்கள். அவர்கள் வேதனையை உணர்ந்து பாருங்கள். அதை விடுத்து ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x