Last Updated : 09 Apr, 2015 02:40 PM

 

Published : 09 Apr 2015 02:40 PM
Last Updated : 09 Apr 2015 02:40 PM

தலைமை தேர்தல் ஆணையராக நஸீம் ஜைதி நியமனம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக, நஸிம் ஜைதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 19-ம் தேதி பொறுப் பேற்கிறார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா வரும் 18-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. தேர்தல் ஆணையத்தில் பணிமூப்பு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மூத்த ஆணையர் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவார். அதன்படி, பிரம்மாவுக்கு அடுத்த நிலையில், தற்போதைய தேர்தல் ஆணையர் நஸிம் ஜைதி உள்ளார்.

இவரை புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று உத்தரவிட்டுள்ளார் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர் வரும் 19-ம் தேதி பதவியேற்கிறார். வரும் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை நஸிம் பதவி வகிப்பார்.

தேர்தல் ஆணையத்தில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் பதவி உள்ளது. தேர்தல் ஆணைய ராக இருந்த பிரம்மா, தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டார். அதன்பிறகு ஒரு இடம் காலியாகவே உள்ளது. இப்போது நஸிமும் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு விட்டதால், மீதமுள்ள 2 ஆணையர் பதவிகளும் காலியாக உள்ளன. எனவே, 2 தேர்தல் ஆணையர்களை புதிதாக நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

புதிதாகப் பதவியேற்கும் நஸிம் தலைமையில், இந்த ஆண்டு இறுதியில் பிஹார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x