Published : 22 Apr 2015 07:26 AM
Last Updated : 22 Apr 2015 07:26 AM

இந்தோனேசியா சென்றார் சுஷ்மா

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 5 நாள் பயணமாக நேற்று இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்கா சோவியத் யூனியன் இடையே பனிப்போர் காலத்தில் அணிசேரா இயக்கம் ஏற்படுவதற்கு 1955-ம் ஆண்டின் ஆசிய - ஆப்பிரிக்க மாநாடு காரணமாக அமைந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த மாநாட்டின் 60-வது ஆண்டு நினைவு விழா இந்தோனேசியாவில் நடை பெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சுஷ்மா இந்தோனேசியா சென்றுள் ளார்.

ஆசிய - ஆப்பிரிக்க ஒத்துழைப்பு உடன்பாட்டின் 10-வது ஆண்டு விழா கொண்டாட்டத்திலும் சுஷ்மா கலந்துகொள்கிறார். வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் அவருடன் சென்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x