Last Updated : 26 Apr, 2015 10:12 AM

 

Published : 26 Apr 2015 10:12 AM
Last Updated : 26 Apr 2015 10:12 AM

நேபாள பூகம்பம்: இந்தியத் தூதரக அதிகாரி மகள் பலி

நேபாள நிலநடுக்கத்தில் இந்தியத் தூதரக அதிகாரியின் மகள் உயிரிழந்தார். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கபூர்தரா மார்க் பகுதியில் இந்தியத் தூதரக அலுவலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் தூதரக ஊழியர்களின் குடியிருப்பு உள்ளது. அங்கு நிலநடுக்கத்தால் பல்வேறு வீடுகள் இடிந்தன.

இதில் இந்தியத் தூதரக அதிகாரி மதன் குடும்பத்தினர் தங்கியிருந்த வீடு தரைமட்டமானது. இதில் அவரது மகள் உயிரிழந்தார். மனைவி படுகாயமடைந்தார். அவரின் நிலைமை மோசமாக உள்ளது. இந்தத் தகவலை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x