Last Updated : 09 Apr, 2015 04:32 PM

 

Published : 09 Apr 2015 04:32 PM
Last Updated : 09 Apr 2015 04:32 PM

ஏமன் மீட்பு நடவடிக்கை நாட்டின் மிகப்பெரிய சாதனை: ஜேட்லி

ஏமனில் சிக்கியவர்களை மீட்பதில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளோம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பாஜக-வின் 2 நாள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அருண் ஜேட்லி, “ஏமனில் என்ன நடந்திருந்தாலும் சரி, மீட்பு நடவடிக்கை நாம் செய்த மிகப்பெரிய சாதனையாகும். இந்தியர்களைத் தவிர வெளிநாட்டவர் 32 பேரையும் நாம் மீட்டுள்ளோம்.

முன்பெல்லாம் இஸ்ரேல் எப்படி தங்கள் மக்களை காப்பாற்றுகிறது என்று ஆச்சரியமடைந்துள்ளோம், ஆனால் இந்தியா தற்போது செய்துள்ளது மிகப்பெரிய சாதனையாகும்.” என்றார்.

இந்தியா இதுவரை ஏமனிலிருந்து 4,500 பேரை காப்பாற்றி அழைத்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x