Published : 17 Apr 2015 04:41 PM
Last Updated : 17 Apr 2015 04:41 PM

அசாமில் அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நில அதிர்வு

அசாமில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.35 மணிக்கு ஏற்பட்ட முதல் நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. பின்னர் 5.50 மணியளவில் ஏற்பட்ட மற்றொரு நில அதிர்வு ஏற்பட்டது. அதன் தாக்கம் ரிக்டரில் 3.8 ஆக பதிவாகியுள்ளது.

அடுத்தடுத்து இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். நில அதிர்வால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x