Last Updated : 07 Apr, 2015 07:18 PM

 

Published : 07 Apr 2015 07:18 PM
Last Updated : 07 Apr 2015 07:18 PM

ஷில்லாங்கில் விஷப் பழங்களை உண்டதால் 14 தொழிலாளர்கள் மரணம்

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் இருந்து மேகாலயாவுக்கு வந்த 14 தொழிலாளர்கள், விஷ காட்டுப் பழங்களை உண்டதால் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் உள்ள தங்கள் முகாமில் மரணமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் உம்புங் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

"எங்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து திங்கள்கிழமைதான் தகவல் கிடைத்தது. தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது" என்று கிழக்கு ஜைந்தியா மலை மாவட்ட காவல்துறை அதிகாரி எம்.கே.தகர் கூறியுள்ளார்.

மேலும் அவர், "அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் அருகில் உள்ள காட்டுக்குச் சென்று பழங்களைப் பறித்தனர். பின்னர் தங்கள் முகாமுக்கு வந்து அந்தப் பழங்களை உண்டுவிட்டு இரவு படுக்கச் சென்றனர். காலையில் அவர்கள் அனைவரும் இறந்துகிடந்தனர். அவர்களின் மரணத்துக்கு விஷப் பழங்கள் என்று தெரியாமல் அவர்கள் பறித்து வந்த பழங்கள்தான் காரணமாக இருக்கும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x