Published : 07 Mar 2015 10:11 AM
Last Updated : 07 Mar 2015 10:11 AM
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள மங்கள்யான் ஆய்வுக் கலம், அந்த கிரகத்தை புதிய வண்ணப் படங்களாக எடுத்து அனுப்பி யுள்ளது.
மங்கள்யானில் இணைக்கப்பட்டுள்ள ‘மார்ஸ் கலர் கேமரா’ செவ்வாய் கிரகத்திலுள்ள எரிமலை, பள்ளத்தாக்குகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.
மங்கள்யானில் இணைக்கப்பட்டுள்ள மீத்தேன் உணர்வி, செவ்வாய்கிரகத்தில் சூரிய ஒளியின் எதிரொளி திறனை (அல்பெடோ) ஆய்வு செய்யும் பணியைத் தொடங்கிவிட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பை ஆய்வு செய்வதுதான் மங்கள்யானின் மிக முக்கிய பணியம்சமாகும்.
இந்தியாவில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படும் தருணத்தில், மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை வண்ணப் புகைப்படங்களாக எடுத்து ஹோலி கொண்டாடியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT