Last Updated : 22 Mar, 2015 10:47 AM

 

Published : 22 Mar 2015 10:47 AM
Last Updated : 22 Mar 2015 10:47 AM

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு: இளைஞரை நிர்வாணமாக்கி கழுதை மீது ஊர்வலம்

சிறுமியை பலாத்காரம் செய்ததாக 19 வயது இளைஞர் ஒருவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஊர் மக்கள், அந்த இளைஞரை நிர்வாணமாக்கி கழுதை மீது அமர்த்தி ஊர்வலமாக சுற்றவைத்து தண்டனை கொடுத்துள்ளனர்.

இந்தசம்பவம் கடந்த வாரம் நடந்ததாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.

தன்னை பலாத்காரம் செய்ததாக நேற்று முன்தினம் இரவு சுபம் பராடியா என்பவர் மீது 15 வயது சிறுமி புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரி்ன்பேரில் 376-வது பிரிவின் கீழும் (பலாத்கார தண்டனை)பாலியல் குற்றங்களிலிருந்து சிறுமிகளை காப்பாற்றுதல் சட்டத்தின் கீழும் அந்த‌ இளைஞர் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக பிங்கர்முகாம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கங்குர்டே தெரிவித்தார்.

தன்னை தொடர்ச்சியாக பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ படமாகவும் அந்த இளைஞர் எடுத்து வைத்துள்ளார். இந்தச் சம்பவத்தை யாரிடமாவது சொன்னால், அந்த வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாகவும் அந்தச் சிறுமி கூறியுள்ளார்.

இதனிடையே, கடந்த வாரத்தில் அகமது நகர் மாவட்டம், வாம்போரி கிராமத்தில் குற்றம்செய்தவர் என புகாருக்கு ஆளான இளைஞரை கிராமமக்கள் நிர்வாணமாக்கி கழுதை மீது அமரவைத்து செருப்பு மாலை அணிவித்து தெருவில் சுற்றவைத்தனர். மேலும் அந்த இளைஞரின் குடும்பத்தாரையும் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 17 பேரை கைதுசெய்துள்ளதாக கங்குர்டே தெரிவித்தார்.

வேற்று சாதியைச் சேர்ந்தவர் அந்த சிறுமி. இருவருக்கும் இடையே பழக்கம் இருந்ததை ஊர்மக்கள் கண்டித்து வந்ததாக தெரிகிறது என்று போலீஸார் மேலும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x