Published : 21 May 2014 01:07 PM
Last Updated : 21 May 2014 01:07 PM

ராஜீவ் காந்தியின் 23-வது நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 23-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவு இடத்தில் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 23-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது, நாடு முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள அவரது நினைவு இடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் பதவியில் விலகவுள்ள மன்மோகன் சிங், சல்மான் குர்ஷித், சுஷில் குமார் ஷிண்டே, சசி தரூர், ப.சிதம்பரம், கமல் நாத் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களும் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்று காலை 6.20 மணியளவில் காங்கிரஸ் தலைவரும், ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி, மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோர் ராஜீவ் நினைவு இடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு கூடியிருந்த குழந்தைகளுடன் இணைந்து ராஜீவ் ஆன்மா சாந்தியடைய துதிகளை பாடி வழிபாடு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x