Published : 03 Mar 2015 07:22 PM
Last Updated : 03 Mar 2015 07:22 PM
காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்கள் அமைதியாக நடைபெற்றதற்கு பாகிஸ்தான், ஹுரியத், மற்றும் தீவிரவாதிகளுக்கு பாராட்டு தெரிவித்த முதல்வர் முப்தி மொகமது சயீதின் பேச்சை ஆதரிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
"ஒருவர் இம்மாதிரி அறிக்கை அளிக்கிறார் என்றால் நாம் அதனை ஆதரிக்க முடியாது." என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "யாரோ ஒருவர் எங்கிருந்தோ ஏதோ அறிக்கை அளிக்கிறார். ஆனால், அதற்கு நாம் பதில் அளிக்க இங்கு கட்டாயப்படுத்தப்படுகிறோம், இது வேலைக்கு உதவாதது.
பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் கொள்கையில் எந்த வித மாற்றமும் இல்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் முழு உணர்வுடன் செயல்படுத்தப்படும்.
இந்த மக்களவை மற்றும் நாட்டின் 125 கோடி மக்களுக்கும் நான் உறுதியளிப்பது என்னவெனில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி அரசு குறைந்தபட்ச பொதுத் திட்ட அடிப்படையில் செயல்படும் என்பதே." என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT