Published : 24 Mar 2015 12:37 PM
Last Updated : 24 Mar 2015 12:37 PM
வாகா எல்லையில் 6 மாதங்களுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் இடையே இனிப்பு பறிமாற்றம் நடைபெற்றது.
பாகிஸ்தான் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, பாகிஸ்தான் ரேஞ்சர் பிரிவு இயக்குநர் பிரிகேடியர் ஜாஹித், இந்திய எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர் எம்.எஃப்.பரூக்கியிடம் இனிப்புகளை வழங்கினார். நேற்றிரவு இந்நிகழ்வு நடந்தது.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதால் தீபாவளிக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியை இந்திய ராணுவம் ரத்து செய்தது. தொடர்ந்து ஈத் பண்டிகைக்கு இனிப்பு வழங்குவதையும் பாகிஸ்தான் நிறுத்தியது.
இந்நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு வாகா எல்லையில் இனிப்புகள் பறிமாற்றம் நடைபெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT