Published : 04 Mar 2015 10:22 AM
Last Updated : 04 Mar 2015 10:22 AM

மக்களவை இயல்புநிலைக்கு திரும்பியது

காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையது தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக நேற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் 2 முறை ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கூறும்போது, “ஜம்மு காஷ்மீரில் தேர்தல் சுமுகமாக நடைபெற்றதற்கு தேர்தல் ஆணையம், பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர்தான் காரணம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே, அவையை சுமுகமாக நடத்த அனுமதியுங்கள்” என்றார். நாயுடு வின் கருத்துக்குப் பிறகு அவையில் அமைதி நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x