Last Updated : 30 Mar, 2015 11:03 AM

 

Published : 30 Mar 2015 11:03 AM
Last Updated : 30 Mar 2015 11:03 AM

உ.பி. தேர்வாணைய வினாத்தாள் கசிவு

உத்தரப்பிரதேசத்தில் பிராந்திய சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான வினாத்தாள், நேற்று தேர்வு தொடங்குவதற்கு சற்றுமுன் வெளியானது. நேற்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கவிருந்த நிலையில் 9.15 மணிக்கு ‘வாட்ஸ்-அப்’பில் வினாத்தாள் வெளியானது. எனினும் தேர்வு திட்டமிட்டபடி இருவேளைகளும் நடந்து முடிந்தது.

காவல்துறை இயக்குநர் ஏ.கே.ஜெயின் கூறும்போது, “முறைகேடு குறித்து விசாரணை நடக்கிறது” என்றார். முதல்நிலைத் தேர்வை நேற்று உ.பி. முழுவதும் 917 மையங்களில் 4.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், உ.பி. அரசுப் பணிகள் தேர்வாணைய தலைவர் அனில் யாதவை பதவி நீக்கவேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x