Last Updated : 08 Mar, 2015 11:02 AM

 

Published : 08 Mar 2015 11:02 AM
Last Updated : 08 Mar 2015 11:02 AM

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மருத்துவ பரிசோதனை

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தான் வழக்கமாக மேற்கொள்ளும் உடல்நல பரி சோதனைகளுக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் (63) அவ்வப்போது தனது உடல்நலம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளும் வழக்கம் உள்ளவர். அதனால் மேதந்தா மருத்துவமனையில் நேற்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சுமார் நான்கு மணி நேரம் அவருக்குப் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டன. பின்னர் அவர் வீட்டிற்குத் திரும்பினார். இந்தப் பரிசோதனையில் அவர் முற்றி லும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று வாரயிறுதி என்பதா லும், வேலைப்பளு சற்று குறைவாக இருந்ததாலும், இந்த வாய்ப்பை தனது உடல்நல பரிசோதனைகளுக்காகப் பயன் படுத்திக் கொண்டார் என்று அமைச் சக வட்டாரங்கள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x