Last Updated : 03 Mar, 2015 10:03 AM

 

Published : 03 Mar 2015 10:03 AM
Last Updated : 03 Mar 2015 10:03 AM

தேசிய நீர்வழிப் பாதையாக 101 தடங்களை அறிவிக்க பரிசீலனை

தேசிய நீர்வழிப் பாதையாக மேலும் 101 தடங்களை அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து கப்பல் போக்கு வரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாநிலங்களவையில் கூறியதாவது:

கூடுதலாக 101 தடங்களை தேசிய நீர்வழிப் பாதையாக அறிவிக்கலாம் என்ற பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆண்டு முழுவதும் போக்குவரத் துக்கு சாத்தியமான நீர்வழித்தடங் கள் இந்தப் பரிந்துரையில் இடம் பெற்றுள்ளன.

இந்தப் புதிய வழித்தடங்கள் தொடர்பான சாத்தியக்கூறு ஆய் வினை இந்திய உள்நாட்டு நீர்வழிப் பாதை ஆணையம் மேற்கொண்டுள் ளது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும். இந்த தடங்கள் தேசிய நீர்வழிப் பாதையாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவற்றை மேம்படுத்துவதற்கான காலவரம்பு முடிவு செய்யப்படும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x