Last Updated : 03 Mar, 2015 01:58 PM

 

Published : 03 Mar 2015 01:58 PM
Last Updated : 03 Mar 2015 01:58 PM

ஜம்மு-காஷ்மீர் அரசு எப்போது செயல்படும்?- ஒமர் கேள்வி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசு எப்போது செயல்படத் துவங்கும் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று முப்தி முகமது சையத் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், அங்கு அமைச்சர் பதவியேற்றுக் கொண்ட மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு இன்னமும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை.

இது தொடர்பாக ட்விட்டரில் ஒமர் கூறியிருப்பதாவது, "காஷ்மீரில் புதிய அரசு அமைய 2 மாதங்கள் காத்திருந்தோம். ஆனாலும் பயனில்லை. பாஜக-வும், மக்கள் ஜனநாயக கட்சியும் அநாவசிய சர்ச்சைகளைத் தவிர்த்து இப்போதே செயல்பட வேண்டும்.

இந்த அரசு எப்போது செயல்படத் தொடங்கும்? அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் இருந்து பணிகளைத் துவங்கலாமே" என கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x