Published : 23 Mar 2015 11:20 AM
Last Updated : 23 Mar 2015 11:20 AM

மக்களுக்கா... அரசியல்வாதிகளுக்கா?

‘இந்த நாட்டைத் திருத்தவே முடியாது… வேண்டாம் வந்துடுங்கப்பா…’ டிராஃபிக் ராமசாமியின் கண்ணீர்ப் பேட்டி! -தமிழக மக்கள் இதைப் படித்த பிறகாவது, ஊழல் கட்சிக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும். காவல் துறை மக்களுக்கானது அல்ல, நியாயத்தை நிலைநிறுத்துவதற்காக அல்ல, அது

அரசியல்வாதிகளுக்கு ஆதரவானது என்பதையே இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. நாளை நமக்கும் இந்த நிலைதான். சர்வாதிகார ஆட்சிபோல இருக்கிறது.

இனியாவது, இலவசங்களுக்கு மயங்காமல், ஓட்டுக்குப் பணம் வாங்காமல் சிந்தித்து வாக்களியுங்கள். ஒருவருமே சரி இல்லை என்றால், நோட்டாவுக்கு வாக்களியுங்கள்.

- மனோஹர்,‘தி இந்து’ இணையதளத்தில்…

***

டிராஃபிக் ராமசாமி ‘இந்தச் சமூகமே என் குடும்பம் இல்லையா' என ஒற்றை வரியில் கூறிப் பல்லாயிரம் வாசகர் கண்களில் நீரை வரவழைத்துவிட்டார்.

ஒரு கொடிய தேசத் துரோகக் குற்றம் புரிந்தவர் போன்று அவரை அதிகாலையில் கைது செய்து இழுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

- பட்டு சாஸ்திரிகள்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x