Published : 22 Mar 2015 11:52 AM
Last Updated : 22 Mar 2015 11:52 AM

பிஹாரில் 4 மையங்களில் தேர்வு ரத்து

மிப்பெரிய மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்ததால், கடந்த 18, 19 தேதிகளில் 4 மையங்களில் நடைபெற்ற 10-ம் வகுப்புத் தேர்வை பிஹார் மாநில அரசு ரத்து செய்துள்ளது.

பிஹாரில் கடந்த 17-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 1,217 மையங்களில் 14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இந்நிலையில், பாட்னாவிலி ருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள மனார் கிராமத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியின் 4 மாடி கொண்ட தேர்வு மையத்தின் சுவர் மீது மாணவர்களின் பெற்றோரும், நண்பர்களும் ஏறி அவர்களுக்கு விடை எழுதிய சீட்டுகளை கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 766 மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தேர்வு மையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x