Published : 13 Feb 2015 11:56 AM
Last Updated : 13 Feb 2015 11:56 AM

பெங்களூரு ரயில் விபத்து: விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் உத்தரவு

பெங்களூரு- எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.

ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி ரயில் (ரயில் எண்: 12677) இன்று காலை 7.40 மணியளவில் தடம் புரண்டதில் 3 பேர் பலியாகினர்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விரைந்துள்ளார். அவருடன் ரயில்வே வாரியத் தலைவரும் சென்றுள்ளார்.

முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறை மீது ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், ரயில் விபத்து தொடர்பாக ரயில் பாதுகாப்பு ஆணையர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.20,000 உதவித் தொகையும் வழங்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x