Last Updated : 07 Feb, 2015 07:52 PM

 

Published : 07 Feb 2015 07:52 PM
Last Updated : 07 Feb 2015 07:52 PM

வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி பணம் கொடுத்ததாக கிரண் பேடி குற்றச்சாட்டு

வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி கட்சி பணம் கொடுத்ததாக பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி புதிய குற்றச்சாட்டை எழுப்ப, அதனை கேஜ்ரிவால் கடுமையாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக சில காட்சிகளையும் அவர் செய்தியாளர்களிடையே காண்பித்துள்ளார்.

மேலும் அவரது ட்விட்டரில், “ஆண்கள், பெண்கள் எப்படி தங்களது வாக்குகள் விலை கொடுத்து வாங்கப்பட்டன என்பதை விவரிக்கும் வெட்கங்கெட்ட சம்பவம் ஊடகங்களில் பதிவாகியுள்ளன.” என்று கூறியுள்ளார்.

இதனை மறுத்த அர்விந்த் கேஜ்ரிவால், “எதிரணியினர் வதந்திகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். அந்த வீடியோ எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. மக்கள் ஏற்கெனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவெடுத்து விட்டனர். வாய்மையே வெல்லும்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x