Last Updated : 04 Feb, 2015 09:51 AM

 

Published : 04 Feb 2015 09:51 AM
Last Updated : 04 Feb 2015 09:51 AM

பிராட்பேண்ட் இணைப்பு வழங்க அனைத்து வழிகளும் ஆராயப்படும்: ரவிசங்கர் பிரசாத்

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் இணைய தள இணைப்பு வழங்குவதற்காக செயற்கைக்கோள், சிறப்பு பலூன்கள் உட்பட அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று நடை பெற்ற டிஜிட்டல் இந்தியா உச்சி மாநாட்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:

வரும் 2016-ம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 2.5 லட்சம் கிராமங்களுக்கும் அதிவேக பிராட்பேண்ட் இணையதள இணைப்பு வழங்குவதற்காக தேசிய கண்ணாடி இழை நெட்வொர்க் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இத்துறை சார்ந்த வல்லுநர்கள் கூறும் அனைத்து வழிகள் குறித்தும் பரிசீலிக்கப்படும். வசதி உள்ள இடங்களில் பூமிக்கடியில் கேபிள் பதிக்கப்படும். இதுதவிர செயற்கைக்கோள் மற்றும் சிறப்பு பலூன்கள் மூலமும் பிராட்பேண்ட் இணைப்பை ஏற்படுத்தவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x