Last Updated : 24 Feb, 2015 11:10 AM

 

Published : 24 Feb 2015 11:10 AM
Last Updated : 24 Feb 2015 11:10 AM

கேரள மார்க்சிஸ்ட் செயலராக‌ கொடியேறி பாலகிருஷ்ணன் தேர்வு

கேரள மாநில சி.பி.எம்.கட்சியின் மாநில செயலராக கொடியேறி பாலகிருஷ்ணன் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

கேரள மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக சி.பி.எம். கட்சியின் மாநில மாநாடு நடைபெற்று வந்தது. அதில் கட்சியின் மாநில செயலராக கொடியேறி பாலகிருஷ்ணன் (61) ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 16 ஆண்டுகளாக பினராயி விஜயன் வகித்து வந்த இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கும் பாலகிருஷ்ணன், தற்போது கேரள மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராகச் செயலாற்றி வருகிறார்.

சி.பி.எம்.கட்சியின் கோட்டை என்று கருதப்படும் கண்ணூர் மாவட்டத்தில் இருந்து மாணவர் பெருமன்றம் மூலம் பாலகிருஷ்ணன் தீவிர அரசியலுக்குள் நுழைந்தார். மிக இளவயதிலேயே மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற அவர், 1995ம் ஆண்டு மாநில செயற்குழு உறுப்பினர் ஆனார்.

ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகப் பதவி வகித்த பாலகிருஷ்ணன், 2006 முதல் 2011ம் ஆண்டு வரை வி.எஸ்.அச்சுதானந்தன் அமைச்சரவையில், உள்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x