Published : 28 Feb 2015 09:11 AM
Last Updated : 28 Feb 2015 09:11 AM
எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு களை நாம் பெற வேண்டுமானால் அதற்கென தரமான கல்வி கட்டமைப்பு, திறன் மேம்பாட்டு கட்டமைப்பு, உயர்கல்விக்கென தனி கொள்கை ஏற்படுத்துவது அவசியம் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை நாடாளு மன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப் பட்டது. அதில் கல்வி தொடர்பாக கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:
தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்தும் வகையில் நமது கொள்கை அமைய வேண்டும். வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டியது அவசிய மாகிறது. தொலைநோக்கு சிந்தனை யுடன் உயர்கல்வி இருக்க வேண்டும். அப்போதுதான் வேலைவாய்ப்புகள் பெருகும்.
உலக தர அளவில் மதிப்பிடும் போது இந்திய கல்வி அமைப்பின் தரம் மிகக் குறைவாக இருக்கிறது என்று வருடாந்திர கல்வி நிலவர அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பித்தல்திறன் மேம் பாடு அடையவில்லை என்றும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. நாடு முழுவதும் இதே நிலைமைதான் காணப்படுகிறது.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 73 சதவீதம் பேரே எழுத்தறிவு பெற் றுள்ளனர். ஆனால் எழுத்தறிவு பெற்ற பெண்கள் விகிதம் குறிப் பிடத்தக்க அளவுக்கு அதிகரித் திருக்கிறது.
2013-14ம் ஆண்டு கணக்கின்படி ஆரம்பப் பள்ளிகளில் சேர்வோர் அளவு சரிந்திருக்கிறது.ஆனால் இதேகாலத்தில் நடு நிலைப்பள்ளிகளில் சேர்க்கை விகிதம் அதிகரித்திருக்கிறது.
உயர்கல்வியில் சேர்வோர் விகிதம் 2005-06-ல் 11.6 சதவீதமாக இருந்தது. அது 2012-13-ல் இரு மடங்காக ( 21.1 சதவீதம்) உயர்ந் துள்ளது. 2005-06- ல் 1.43 கோடி பேர் உயர்கல்வியில் சேர்ந்தனர். 2012-13- ல் இது 2.93 கோடியாக உயர்ந்திருக்கிறது.
அதேவேளையில் உயர்கல்வி யில் சேர்வோரில் நிறையபேர் பாதியிலேயே நின்றுவிடுகின்ற னர். குறைந்த கல்வியறிவு பெற்ற வர்களும் திறன்குறைந்தவர் களுமே வேலை தேடுபவர்களில் கணிசமாக உள்ளனர். இதனால் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை ஏற்படும்.
இவ்வாறு பொருளாதார ஆய் வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT