Published : 02 Feb 2015 08:09 PM
Last Updated : 02 Feb 2015 08:09 PM
பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியின் தேர்தல் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் சிலர் தாக்கியதாகவும், அலுவலகம் சூறையாடப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் வழக்கறிஞர்கள் தாக்கியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கிரண் பேடி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
”கிருஷ்ணா நகரில் உள்ள எனது பாஜக தொகுதி அலுவலகம் தாக்கப்பட்டதாக எனக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சிலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு விரைகிறேன்.” என்று ட்வீட் செய்துள்ளார்.
இத்தகைய தாக்குதல் நடந்ததாக போலீஸ் தரப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காரணம் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT