Last Updated : 28 Feb, 2015 03:37 PM

 

Published : 28 Feb 2015 03:37 PM
Last Updated : 28 Feb 2015 03:37 PM

6 கோடி கழிப்பறைகள் கட்டுவோம்: அருண் ஜேட்லி உறுதி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுதும் 6 கோடி கழிப்பறைகளைக் கட்டி முடிப்போம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி அளித்தார்.

2015-16 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அருண் ஜேட்லி தனது உரையில் இதனை தெரிவித்தார்.

"உதாரணமாக, 50 லட்சம் கழிப்பறைகள் ஏற்கெனவே 2014-15-இல் கட்டப்பட்டது என்று என்னால் கூற முடிகிறது என்றால், அரசின் இலக்கான 6 கோடி கழிப்பறைகள் என்பதும் உறுதியாக கட்டி முடிக்கப்படும் என்றே நான் இந்த அவையில் கூற விரும்புகிறேன்.

தூய்மை இந்தியா திட்டம் மூலம் இந்தியாவை மறு உருவாக்கம் செய்வோம்.

நிலக்கரி சுரங்க ஏலம், தூய்மை இந்தியா ஆகிய திட்டங்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு சாதித்த முக்கியமான அம்சங்கள் ஆகும்."

என்றார் அருண் ஜேட்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x