Published : 16 Feb 2015 03:02 PM
Last Updated : 16 Feb 2015 03:02 PM
ஆந்திர மாநிலம் திருப்பதி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது.
திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. எம்.வெங்கடராமன் மறைந்ததையடுத்து, அத்தொகுதிக்கு கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.சுகுணா போட்டியிட்டார். இவர் மறைந்த எம்.எல்.ஏ. வெங்கடராமனின் மனைவியாவார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.ஸ்ரீதேவி களமிறக்கப்பட்டார்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த தெலுங்கு தேசம் வேட்பாளர் எம்.சுகுணா 1.16 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT