Last Updated : 22 Feb, 2015 01:59 PM

 

Published : 22 Feb 2015 01:59 PM
Last Updated : 22 Feb 2015 01:59 PM

லஷ்கர் கமாண்டர்கள் சுட்டுக்கொலை

வடக்கு காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நேற்று நடைபெற்ற மோதலில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

சோப்போர் அருகே தக்-குண்ட் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் கொண்ட கூட்டுப்படை நேற்று காலை அங்கு விரைந்தது. சந்தேகத்துக்கிடமான வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தபோது, அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து நடைபெற்ற மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் நேற்று கூறும்போது, “கொல்லப்பட்ட இருவரும் லஷ்கர் கமாண்டர்கள் நுமான், அபுசாத் என்று தெரியவந்துள்ளது. இருவரும் வெளிநாட்டவர்கள். சம்பவ இடத்திலிருந்து இரு ஏகே 47 ரக துப்பாக்கிகள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன” என்றார்.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x