Published : 24 Feb 2015 11:10 AM
Last Updated : 24 Feb 2015 11:10 AM
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றிய பின்னர், குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் மாநிலங் களவை கூடியது. அப்போது, சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மறைவுக்கு அவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து, சமீபத்தில் காலமான கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணன், உத்தராகண்ட் மாநிலங்களவை உறுப்பினர் மனோரமா டி.சர்மா, முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.கே.டி.ராமச்சந்திரன், கமலா சின்ஹா, ரமேஷ்வர் தாகுர், ஆனந்த் ராம் ஜெய்ஸ்வால், சரோஜினி மஹிஷி உள்ளிட்டோருக்கும் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்தவைக்கப்பட்டது.
சுமித்ரா மகாஜன் தலைமையில் கூடிய மக்களவையில், அசாமில் போடோ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான 81 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT