Published : 12 Jan 2015 02:27 PM
Last Updated : 12 Jan 2015 02:27 PM

வங்கிகளில் இனி முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கும்: அருண் ஜேட்லி

கடந்த ஏழு மாதங்களில் இந்தியப் பொருளாதார நிலையை உயர்த்தும்விதமாக வங்கிப் பணிகள் வளர்ச்சி அடைந்துள்ளன.

வரும் நாட்களில் வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கும் என்று அருண் ஜேட்லி கூறினார்.

குஜராத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச முதலீட்டார் (வைபரண்ட் குஜராத்) மாநாட்டின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, "இந்தியாவைப் பற்றி ஒரு சாதகமான கண்ணோட்டம் உலக நாடுகள் மத்தியில் உருவாக அரசு கடந்த சில மாதங்களாகவே ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இதன் காரணமாக வரும்நாட்களில் வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.

நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும் உற்பத்திக்கான செலவை அதிகரிக்கவும் வளர்ச்சிப்பணிகளை ஊக்குவிக்கவும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் மத்திய அரசு முன்னுரிமை கொடுக்கும்.

பொது சரக்குகளுக்கும் சேவைகளுக்குமான வரி (ஜிஎஸ்டி) நாடு முழுவதும் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுததப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x