Published : 31 Jan 2015 09:23 PM
Last Updated : 31 Jan 2015 09:23 PM
சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மதாங் சிங் இன்று கைது செய்யப்பட்டார்.
மேற்குவங்கம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடியை வசூலித்து முறைகேடு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ பல்வேறு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது.
சிட்பண்ட் முறைகேடு தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சர் மதாங் சிங் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவரிடம் சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT