Published : 03 Jan 2015 12:34 PM
Last Updated : 03 Jan 2015 12:34 PM
கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த பயணியிடம் ரூ. 2.45 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கக் கட்டிகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று அதிகாலை 5.15 மணிக்கு வந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனையிட்டனர். இதில் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த சதத் என்ற பயணி கொண்டுவந்திருந்த மின்விசிறி மற்றும் எமர்ஜென்சி விளக்கில் தலா 1 கிலோ எடை கொண்ட 9 தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சதத்தை கைது செய்தனர்.
கடத்தல் முயற்சிகளை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி கடந்த நவம்பர் மாதம் தங்கம் மீதான 80:20 கட்டுப்பாட்டை (20 சதவீத தங்கத்தை நகைகளாக மீண்டும் ஏற்றுமதி செய்யவேண்டும்) நீக்கியது. என்றாலும் கடத்தல் குறைந்தபாடில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT