Published : 27 Jan 2015 01:33 PM
Last Updated : 27 Jan 2015 01:33 PM

கேரளாவில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளாவில் பாஜக சார்பில் நடைபெறும் பந்த் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மதுபான உரிமையாளர்களிடம், கேரள மாநில நிதி அமைச்சர் மணி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் பதவி விலக வலியுறுத்தியும் ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும் பா.ஜ.க சார்பில் பந்த் நடக்கிறது.

இதனால், கேரளாவில் சாலை, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x